×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை(29.07.020) நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் சேலான மழை பெய்யக்கூடும். அதிபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியநாயக்கன்பாளையம், வலங்கைமான், நன்னிலம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும், திருவாரூர், நீடாமங்கலம், திருப்பூண்டி பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, கொள்ளிடம், தஞ்சை பாபநாசம், கோவை வேளாண் பல்கலை பகுதிகளில் தலா 4 செ.மீ, ராசிபுரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஓமலூர், ஜெயங்கொண்டம், காரைக்கால் தேவலா பகுதிகளில் தலா 2 செ.மீ, பாரூர், சிவகங்கை, புள்ளம்பாடி, பெருந்துறை, அரூர், கிழச்செருவை, வேப்பூர், அகரம் சீகுர் பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூலை 28(இன்று), தெற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 28, 29 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 30ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 28 முதல் 31ம் தேதி வரை கடலோர கேரளா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 30, 31 தேதிகளில் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 28 முதல் 31ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : districts ,Chennai Meteorological Center ,Thiruvarur ,Thanjavur , Atmospheric mantle circulation, heavy rain, Chennai Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...